Aug 27

பாடல் : எனதுயிரே எனதுயிரே
படம் : பீமா
இசை : ஹாரிஸ் ஜெயராஜ்

written by அருட்பெருங்கோ \\ tags:

Aug 22

பாடல் : பாடிப் பறந்த கிளி
படம் : கிழக்கு வாசல்
இசை : இளையராஜா
குரல் : எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள் : ஆர் வி உதயகுமார்

பாடிப் பறந்த கிளி
பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே
கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே

(பாடிப் பறந்த)

சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சிப் போனதடி
கணட கனவு அது காணாதாச்சு
கண்ணுமுழிச்சா அது வாராது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு

(பாடிப் பறந்த)

ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கல்லிலடிச்சா அது காயம் ஆறும்
சொல்லிலடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
வீணாச தந்தவரு யாரு யாரு

(பாடிப் பறந்த)

பாடலைக் கேட்க


Music Plugin தளத்தில் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

written by அருட்பெருங்கோ

Aug 21

பாடல் : மலையோரம் வீசும் காத்து
படம் : பாடு நிலாவே (1987)
இசை : இளையராஜா
குரல் : எஸ்.பி.பி

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
யாராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாயும் தந்த பாட்டுதானம்மா
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா

வான் பறந்த தேன் சிட்டு நான் புடிக்க வாராதா
கள்ளிருக்கும் ரோசாப்பூ கை கலக்க கூடாதா
ராப்போது ஆனா உன் ராகங்கள் தானா
அன்பே சொல் நானா தொட ஆகாத ஆணா
உள் மூச்சு வாங்கினேனே முள் மீது தூங்கினேனே
இல்லாத பாரமெல்லாம் நெஞ்சோடு தாங்கினேனே
நிலாவ நாளும் தேடும் வானம் நான்

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா

குத்தாலத்து தேன் அருவி சித்தாட தான் கட்டாதா
சித்தாடைய கட்டி ஏழை கையில் வந்து கிட்டாதா
ஆத்தோரம் நாணல் பூங்காத்தோடு ஆட
ஆவாரம் பூவில் அது தேவாரம் பாட
இங்கே நான் காத்திருக்க என் பார்வை பூத்திருக்க
எங்கேயோ நீயிருந்து என் மீது போர் தொடுக்க
கொல்லாதே பாவம் இந்த ஜீவன் தான்

மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா
யாராரோ பாடினாலும் ஆராரோ ஆகாதம்மா
சொந்தங்கள் தேடினாலும் தந்தை தாய் ஆகாதம்மா
என்னோட தாயும் தந்த பாட்டுதானம்மா
மலையோரம் வீசும் காத்து
மனசோடு பாடும் பாட்டு
கேக்குதா கேக்குதா

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

written by அருட்பெருங்கோ

Aug 14

பாடல் : பூமாலையே தோள் சேரவா
படம் : பகல் நிலவு
இசை : இளையராஜா
குரல் : இளையராஜா, ஜானகி

பூமாலையே தோள் சேரவா
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( ஏங்கும் இரு )
இளைய மனது ( இளைய மனது )
இணையும் பொழுது ( இணையும் பொழுது )
இளைய மனது ( தீம்தன தீம்தன )
இணையும் பொழுது ( தீம்தன தீம்தன )
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )

நான் உனை நினைக்காத நா…ளில்லையே
தேனினை தீண்டாத பூ… இல்லையே (தனனா)
நான் உனை நினைக்காத நா…ளில்லையே (என்னை உனக்கென்று கொடுத்தேன்)
தேனினை தீண்டாத பூ…வில்லையே (ஏங்கும் இளங்காதல் மயில்நான்)
தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)
தேன்துளி பூவாயில் (லலலா) பூவிழி மான்சாயல் (லலலா)
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
கன்னி எழுதும் வண்ணம் முழுதும் வந்து தழுவும் ஜென்மம் முழுதும்
நாளும் பிரியாமல் காலம் தெரியாமல் கலையெலாம் பழகுவோம் அனுதினம்

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா

(லலல லலலா)
கோடையில் வாடாத கோயில் புறா (லலலா)
காமனைக் காணாமல் காணும் கனா (லலலா)
கோடையில் வாடாத கோயில் புறா (ராவில் தூங்காது ஏங்க)
காமனைக் காணாமல் காணும் கனா (நாளும் மனம்போகும் எங்கோ)
விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது (லலலா)
விழிகளும் மூடாது (லலலா) விடிந்திடக் கூடாது
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
கன்னி இதயம் என்றும் உதயம் இன்று தெரியும் இன்பம் புரியும்
காற்று சுதி மீட்ட காலம் நதி கூட்ட கனவுகள் எதிர் வரும் அணுகுவோம்

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா (ஏங்கும் இரு)
இளைய மனது ( இளைய மனது )
இணையும் பொழுது ( இணையும் பொழுது )
இளைய மனது ( தீம்தன தீம்தன )
இணையும் பொழுது ( தீம்தன தீம்தன )
பூஜை மணியோசை பூவை மனதாசை
புதியதோர் உலகிலே பறந்ததே

பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா – ( வாசம் வரும் )
பூமாலையே (ஏங்கும் இரு) தோள் சேரவா

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

written by அருட்பெருங்கோ

Aug 09

பாடல் : நான் தேடும் செவ்வந்தி பூவிது
படம் : தர்மபத்தினி (1986)
இசை : இளையராஜா
குரல் : இளையராஜா , ஜானகி

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பறந்து செல்ல வழி இல்லையோ… பருவக் குயில் தவிக்கிறதே…
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்… இளமை அது தடுக்கிறதே
பொன்மானே என் யோகம்தான்
பெண்தானோ சந்தேகம்தான்
என் தேவி… ஆஆஆ ஆஆஆ
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்…உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு?

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ?
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ?
தள்ளாடும் பெண்மேகம்தான்
என்னாளும் உன் வானம் நான்
என் தேவா ஆஆஆ ஆஆஆ
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்? என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

written by அருட்பெருங்கோ

Aug 08

பாடல் : தேவதை இளந்தேவி
படம் : ஆயிரம் நிலவே வா
குரல் : எஸ்.பி.பி
இசை : இளையராஜா

தேவதை இளந்தேவி உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ….நீயில்லாமல் நானா
தேவதை இளந்தேவி உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ…. நீயில்லாமல் நானா

ஏரிக்கரை பூவெல்லம் எந்தன் பேர் சொல்லாதோ
பூவசந்தமே நீமறந்ததேன் ஆற்றுமணல் மேடையிலே
நான்வரைந்த கோலங்கள் தேவமுல்லையே காணவில்லையே
காதல் சோதனை இரு கண்ணில் வேதனை ஒரு வானம் பாடி
தேகம் வாடி பாடும் சோகம் கோடி

தேவதை இளந்தேவி உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ….நீயில்லாமல் நானா

எந்தனது கல்லறையில் வேறொருவன் தூங்குவத
விதியென்பதா சதியென்பதா சொந்தமுள்ள காதலியே
வற்றி விட்ட காவிரியே உந்தனாவியய் நீ வெறுப்பதா
இது கண்ணீர் ராத்திரி என் கண்ணே ஆதரி இவன் தேயும் தேடி
கண்ணிர் யாதி நீதான் எந்தன் பாதி

தேவதை இளந்தேவி உன்னைச்சுற்றும் ஆவி
காதலான கண்ணீர் காணவில்லையா
ஓ….நீயில்லாமல் நானா ஓ….நீயில்லாமல் நானா
ஓ….நீயில்லாமல் நானா ஓ….நீயில்லாமல் நானா

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

written by அருட்பெருங்கோ

Aug 04

பாடல் : அண்டங்கா லேனா (தெலுங்கு) சொர்க்கம் போவேனா (தமிழ்)
படம் : கோதாவரி (தெலுங்கு)
இசை : கே. எம். ராதாகிருஷ்ணன்
குரல் : சுனிதா
தமிழ் வரிகள் : அருட்பெருங்கோ ( இது தெலுன்ங்குப் பாடலின் மொழிபெயர்ப்பல்ல. மெட்டுக்கு பாட்டெழுதும் என் கன்னி முயற்சி :) )

சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
வளையல் உடைகிறது உடையும் களைகிறது இமையாலே என்னைப் போர்த்தடா…
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…

கண்கள் மருகிப்பார்த்து… கைகள் இறுகிச்சேர்த்து… உதடு நான்கும்நாணி… முத்தமிட்டதே
வெட்கம் சிவந்துபோக… நாணம் நடுங்கி சாக… காதல்கன்னி உன்னைத்… தொட்டுவிட்டதே
முத்தங்கள் திண்டாடி… முடிகின்ற வேளை… முகம்தொடங்கி நகம்வரையும்… நீதொட்டு மெய்பட்டு என்தேகம் என்னாகுமோ

சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…

இமைகள் மூடிக்கிடக்க… இதழும் தேடித்திறக்க… இரவுக் களிகள் நடத்த….உயிரும்பூக்குது
காதல் நம்மை நோக்க… கூந்தல் எடையும் சாய்க்க…விரலும் நகமும் தைக்க… காமம்பூக்குது
இரவெல்லாம் போராடி… ஐம்புலனும் வெல்லும்… அதிகாலை புதுவேளை… அப்போது மென்னோடு ஒன்றாக நீராடவா

சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…
வளையல் உடைகிறது உடையும் களைகிறது இமையாலே என்னைப் போர்த்தடா…
சொர்க்கம் போவேனா மலரா யாவேனா நீ தொடும் போது காதலா…

்தெலுங்குப் பாடலைக் கேட்க :

Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

written by அருட்பெருங்கோ

Aug 03

பாடல் : நேத்து ஒருத்தர ஒருத்தர
படம் : புதுப்பாட்டு
இசை : இளையராஜா
குரல் : இளையராஜா, சித்ரா
வரிகள்: ???

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

காத்து…குளிர் காத்து
கூத்து…என்ன கூத்து

சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது
பாட்டுத்தான்…புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்
எணஞ்சதொரு…கூட்டுத்தான்
பாட்டுத்தான்…புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்
எணஞ்சதொரு…கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

ஆத்தங்கரையோரம் பூத்திருக்கும் அழகுப் பூவாசம்
பாத்து மனசோரம் பசிச்சிருக்கும் பல நாள் உன் நேசம்
அடி ஆத்தி ஆத்திமரம் அரும்பு விட்டு ஆரம் பூத்தமரம்
மாத்தி மாத்தி தரும் மனசு வச்சு மால போட வரும்
பூத்தது பூத்தது பார்வ போர்த்துது போர்த்துது போர்வ
பாத்ததும் தோளில தாவ கோர்த்தது கோர்த்தது பூவ

போட்டா…கண போட்டா
கேட்டா…பதில் கேட்டா

வழி காட்டுது…பலசுகம் கூட்டுது…வருகிற…

பாட்டுத்தான்…புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்
எணஞ்சதொரு…கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

அழகா சுதி கேட்டு நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு
படிப்பேன் பல பாட்டு தினம் நடக்கும் காதல் விளையாட்டு
இந்த மானே மரகதமே ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே
பாடும் ஒரு வரமே எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே
பாத்தொரு மாதிரி ஆச்சு ராத்திரி தூக்கமும் போச்சு
காத்துல கரையுது மூச்சு காவிய மாகிட லாச்சு

பாத்து…வழி பாத்து
சேத்து…ஒன்ன சேத்து
அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது

பாட்டுத்தான்…ஹே ஹே ஹே…புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்… ஹே ஹே ஹே…
எணஞ்சதொரு…கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

காத்து…குளிர் காத்து
கூத்து…என்ன கூத்து

சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது

பாட்டுத்தான்…புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்
எணஞ்சதொரு…கூட்டுத்தான்
பாட்டுத்தான்…புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்
எணஞ்சதொரு…கூட்டுத்தான்

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

written by அருட்பெருங்கோ