தேவதை இளந்தேவி பூமாலையே தோள்சேரவா
Aug 09

பாடல் : நான் தேடும் செவ்வந்தி பூவிது
படம் : தர்மபத்தினி (1986)
இசை : இளையராஜா
குரல் : இளையராஜா , ஜானகி

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பறந்து செல்ல வழி இல்லையோ… பருவக் குயில் தவிக்கிறதே…
சிறகிரண்டும் விரித்துவிட்டேன்… இளமை அது தடுக்கிறதே
பொன்மானே என் யோகம்தான்
பெண்தானோ சந்தேகம்தான்
என் தேவி… ஆஆஆ ஆஆஆ
உன் விழி ஓடையில் நான் கலந்தேன்…உன் கனி விழும் என தவம் கிடந்தேன்
பூங்காத்து சூடாச்சு ராஜாவே யார் மூச்சு?

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

மங்கைக்குள் என்ன நிலவரமோ மஞ்சத்தில் விழும் நிலை வருமோ?
அன்னத்தை எந்தன் விரல் தொடுமோ என்றைக்கும் அந்த சுகம் வருமோ?
தள்ளாடும் பெண்மேகம்தான்
என்னாளும் உன் வானம் நான்
என் தேவா ஆஆஆ ஆஆஆ
கண்மலர் மூடிட ஏன் தவித்தேன்? என் விரல் நகங்களை தினம் இழந்தேன்
தாலாட்டு பாடாமல் தூங்காது என் கிள்ளை

நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
பூவோயிது வாசம், போவோம் இனி காதல் தேசம்
நான் தேடும் செவ்வந்தி பூவிது
ஒரு நாள் பார்த்து அந்தியில் பூத்தது

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

No Related Posts but...

written by அருட்பெருங்கோ

9 Responses to “நான் தேடும் செவ்வந்தி பூவிது”

  1. த.அகிலன் Says:

    இளையராஜா நிகழ்த்திய ஜெயாரீவி நிகழ்ச்சியில் மஞ்சரியும் ராஜாவும் இணைந்து பாடினார்களே இந்த பாடலை அற்புதமாயிருந்தது. அன்றிலிருந்து மஞ்சரியின் குரலுக்கு ரசிகள் நான். ஜானகியைக் குறை சொல்லவில்லை

  2. வடுவூர் குமார் Says:

    என்னை மயக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று.

  3. அருட்பெருங்கோ Says:

    வாங்க அகிலன்,

    /இளையராஜா நிகழ்த்திய ஜெயாரீவி நிகழ்ச்சியில் மஞ்சரியும் ராஜாவும் இணைந்து பாடினார்களே இந்த பாடலை அற்புதமாயிருந்தது. அன்றிலிருந்து மஞ்சரியின் குரலுக்கு ரசிகள் நான். ஜானகியைக் குறை சொல்லவில்லை/

    நான் இளையராஜா குரலுக்காகவே ரசிக்கும் பாடல்களுள் இதுவும் ஒன்று.

    மஞ்சரி குரலை இன்னும் கேட்கவில்லை… கேட்டு விட்டு சொல்கிறேன் ;)

  4. அருட்பெருங்கோ Says:

    / என்னை மயக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று./

    ஆமாம் குமார்! மனதை மயக்கி விடும் பாடல்தான்!

  5. Anonymous Says:

    enakum intha padal pidikum

  6. அருட்பெருங்கோ Says:

    / enakum intha padal pidikum/

    பலருக்கும் பிடித்த பாடல் தான் இது நண்பரே

  7. Sud Gopal Says:

    அடடே…பாடலின் துவக்கத்தில் இளையராஜா செய்யும் ஆலாபனை இருக்கிறதே…

    Eternal bliss….

  8. வந்தியத்தேவன் Says:

    இந்தப் பாடல் எனக்கு எப்பொழுதும் பிடிக்கும். சிறூவயதில் இருந்தே நான் ரசிக்கும் பாடல்களில் ஒன்று ராஜாவின் குரலும் கவிவரிகளும் மனதைக் கொள்ளை கொள்ளும், இந்தப் பாடலின் சுவையை வார்த்தைகளால் வடிக்கமுடியாது.

    இளையராஜா நிகழ்த்திய ஜெயாரீவி நிகழ்ச்சியில் மஞ்சரியும் ராஜாவும் இணைந்து பாடினார்களே இந்த பாடலை அற்புதமாயிருந்தது. ஒன்ஸ்மோர் கேட்டு மீண்டும் பாடிய பாடல்.

    இந்தப்பாடலில் ஆரம்பத்தில் ராஜாவின் ஆலாவும் அதன்பின்னர் வரும் அந்த கிட்டார் இசையும் வர்ணிக்க வார்த்தைகளே இல்லை. ராஜா ராஜாதான்.

  9. J K Says:

    அருமையான பாடல்….

    கங்கை அமரன் எழுதியது.

Leave a Reply

சங்கீத ஸ்வரங்கள் அண்டங்கா லேனா (சொர்க்கம் போவேனா)
Aug 03

பாடல் : நேத்து ஒருத்தர ஒருத்தர
படம் : புதுப்பாட்டு
இசை : இளையராஜா
குரல் : இளையராஜா, சித்ரா
வரிகள்: ???

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

காத்து…குளிர் காத்து
கூத்து…என்ன கூத்து

சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது
பாட்டுத்தான்…புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்
எணஞ்சதொரு…கூட்டுத்தான்
பாட்டுத்தான்…புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்
எணஞ்சதொரு…கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

ஆத்தங்கரையோரம் பூத்திருக்கும் அழகுப் பூவாசம்
பாத்து மனசோரம் பசிச்சிருக்கும் பல நாள் உன் நேசம்
அடி ஆத்தி ஆத்திமரம் அரும்பு விட்டு ஆரம் பூத்தமரம்
மாத்தி மாத்தி தரும் மனசு வச்சு மால போட வரும்
பூத்தது பூத்தது பார்வ போர்த்துது போர்த்துது போர்வ
பாத்ததும் தோளில தாவ கோர்த்தது கோர்த்தது பூவ

போட்டா…கண போட்டா
கேட்டா…பதில் கேட்டா

வழி காட்டுது…பலசுகம் கூட்டுது…வருகிற…

பாட்டுத்தான்…புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்
எணஞ்சதொரு…கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

அழகா சுதி கேட்டு நீ நடக்கும் நடையில் ஜதி கேட்டு
படிப்பேன் பல பாட்டு தினம் நடக்கும் காதல் விளையாட்டு
இந்த மானே மரகதமே ஒன்ன நெனச்சு நானே தினம் தினமே
பாடும் ஒரு வரமே எனக்களிக்க வேணும் புது ஸ்வரமே
பாத்தொரு மாதிரி ஆச்சு ராத்திரி தூக்கமும் போச்சு
காத்துல கரையுது மூச்சு காவிய மாகிட லாச்சு

பாத்து…வழி பாத்து
சேத்து…ஒன்ன சேத்து
அரங்கேத்துது மனசுல பூத்தது பூத்தது

பாட்டுத்தான்…ஹே ஹே ஹே…புதுப்பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்… ஹே ஹே ஹே…
எணஞ்சதொரு…கூட்டுத்தான்

நேத்து ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
ஒருத்தர ஒருத்தரப் பாத்தோம்
பாத்து ஒருத்தர ஒருத்தர மறந்தோம்
ஒருத்தர ஒருத்தர மறந்தோம்

காத்து…குளிர் காத்து
கூத்து…என்ன கூத்து

சிறு நாத்துல நடக்குற காத்துல பூத்தது

பாட்டுத்தான்…புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்
எணஞ்சதொரு…கூட்டுத்தான்
பாட்டுத்தான்…புது பாட்டுத்தான்
தனக்குத்தக்க…கூட்டுத்தான்
எணஞ்சதொரு…கூட்டுத்தான்

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

No Related Posts but...

written by அருட்பெருங்கோ

5 Responses to “நேத்து ஒருத்தர ஒருத்தர…”

  1. .:: மை ஃபிரண்ட் ::. Says:

    ஆமா.. நேத்து ஒருத்தரை பார்த்தேண். பழைய நண்பர். ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன். உங்களுக்கு எப்படி தெரியும்?

  2. அருட்பெருங்கோ Says:

    / ஆமா.. நேத்து ஒருத்தரை பார்த்தேண். பழைய நண்பர். ரொம்ப நாள் கழிச்சு பார்த்தேன். உங்களுக்கு எப்படி தெரியும்?/

    அவரேதாங்க சொன்னாரு… :)

  3. சுதர்சன்.கோபால் Says:

    One of the best from Ilaiyaraja..

    Sung by Ilaiyaraja and K.S.Chitra..

    (rest after 6)

  4. சுதர்சன்.கோபால் Says:

    பஞ்சு அருணாசலத்தின் தயாரிப்பில் வெளியான புதுப்பாட்டில் ஹீரோ ராமராஜனுக்கு ரெண்டு கதாநாயகிகள்.அப்போது புதுன்னு ப்ரிஃபிக்ஸோட படத்தலைப்பு வருவது ஒரு செண்டிமெண்டா இருந்தது.புதுமனிதன்,புதுநெல்லு புது நாத்து,புதுப்புது அர்த்தங்கள் and so on and s forth..

    எங்க ஊரு காதலைப் பத்தி என்னா நினைக்கிறே,இந்த பூமியே எங்க சாமியம்மா…

  5. அருட்பெருங்கோ Says:

    வாங்க சுதர்சன்…
    தகவலா அள்ளீத் தெளிக்கிறீங்க…
    பெண்குரல் சித்ராவினுடையதா? அப்டேட் பண்ணிட்றேன் :) அப்படியே பாடல் வரியும் யாருன்னு சொல்லுங்க ;)

Leave a Reply