மலையோரம் வீசும் காத்து எனதுயிரே எனதுயிரே
Aug 22

பாடல் : பாடிப் பறந்த கிளி
படம் : கிழக்கு வாசல்
இசை : இளையராஜா
குரல் : எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள் : ஆர் வி உதயகுமார்

பாடிப் பறந்த கிளி
பாத மறந்ததடி பூமானே
ஆத்தாடி தன்னாலே கூத்தாடி நின்றேனே
கேட்காத மெட்டெடுத்து வாரேன் நானே

(பாடிப் பறந்த)

சொல்லெடுத்து வந்த கிளி நெஞ்செடுத்துப் போனதடி
நெல்லறுக்கும் சோலையொண்ணு செல்லரிச்சிப் போனதடி
கணட கனவு அது காணாதாச்சு
கண்ணுமுழிச்சா அது வாராது
வட்ட நெலவு அது மேலே போச்சு
கட்டியிழுத்தா அது வாராது
சேதாரம் செஞ்சவரு யாரு யாரு

(பாடிப் பறந்த)

ஒத்தயடிப் பாதையில நித்தமொரு கானமடி
அந்த வழி போகையில காலு ரெண்டும் ஊனமடி
கல்லிலடிச்சா அது காயம் ஆறும்
சொல்லிலடிச்சா அது ஆறாது
பஞ்சு வெடிச்சா அது நூலாப்போகும்
நெஞ்சு வெடிச்சா அது தாங்காது
வீணாச தந்தவரு யாரு யாரு

(பாடிப் பறந்த)

பாடலைக் கேட்க


Music Plugin தளத்தில் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

No Related Posts but...

written by அருட்பெருங்கோ

One Response to “பாடிப் பறந்த கிளி”

  1. Sud Gopal Says:

    சித்தி கல்யாணத்தின் போது டெக் எடுத்துப் பார்த்த படம்.ஆர்.வி.உதயகுமாருக்கு செகண்ட் இன்னிங்ஸுக்கு வாய்ப்புத் தந்த படம்.கல்லாப்பெட்டி சிங்காரத்தின் கடைசிப் படம்.

    பாடலை நினைவூட்டியமைக்கு நன்றி…

Leave a Reply

Press F12 to toggle between English and Tamil

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout