பறவையே எங்கு இருக்கிறாய்? 2007 – காதல் பாடல்கள் - 1
Jan 28

படம் : துளசி (தெலுங்கு)
இசை : தேவி ஸ்ரீபிரசாத்
குரல் : சித்ரா, சாகர்
வரிகள் : பாஸ்கரபட்லா

இந்தப் பாடலின் மெட்டுக்கு நான் எழுதிய தமிழ் வரிகள். தெலுங்கு பாடலின் மெட்டுக்கு தமிழ் வரிகள் பொருந்துகின்றனவா என்பதை நீங்கள் தான் சொல்ல வேண்டும் :)

உன் கண்ணில்பாதி என் கண்ணில்பாதி
கண்டோமே ஓரோவியம்

உன் சொல்லில்பாதி என்சொல்லில் பாதி
செய்தோமே சிறுகாவியம்

கனாவில் கனாவில் மனம் என்னிடமில்லை
உன்னோடு உலா போய் வரும்

உலாவில் உலாவில் உடல்தானே இருக்கும்
பறந்தோடும் மனம் உன்னிடம்

(உன் கண்ணில்பாதி…)

நிறமாக நானும் நிறை வாசம் நீயும்
பூவிலே ஒருவராய்… மலர லாமா?
இரவாக நானும் சிறு மீன்கள் நீயும்
வானிலோ வெண்ணிலா… நுகர லாமா?

கண்ணடியில் கனவாக வருகின்ற வேளை
இமைகொண்டு இரவோடு சிறை செய்யவா?
கைதாக கண்தேடி நானாக வந்தேன்
என்சிறையும் நீயல்லவா?

(உன் கண்ணில்பாதி…)

விரலாக நானும் ஒரு தூவல்* நீயும்
காதலும் கவிதையே எழுத லாமா?
சிறகாக நானும் சிறு பறவை நீயும்
ஒன்றாக வானிலே பறக்க லாமா?
உன்தேகம் சிறகாக வந்தாலே நோகும்
என்னுள்ளே உயிராக்கி நான் சுமக்கவா?
சுமையின்றி சுகமாக நீயென்னை சுமக்க
சிறகிலொரு இறகாகவா?

(உன் கண்ணில்பாதி…)

*தூவல் - பேனா

தெலுங்குப் பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ.

No Related Posts but...

written by அருட்பெருங்கோ

11 Responses to “உன் கண்ணில்பாதி என் கண்ணில்பாதி”

  1. நாடோடி இலக்கியன் Says:

    //உன் கண்ணில்பாதி என் கண்ணில்பாதி
    கண்டோமே ஓரோவியம்//

    முதல் வரியே வசிகரிக்கிறது!
    வாழ்த்துகள் அருட்பெருங்கோ!!

  2. அருட்பெருங்கோ Says:

    /முதல் வரியே வசிகரிக்கிறது!
    வாழ்த்துகள் அருட்பெருங்கோ!!/

    வாழ்த்துகளுக்கு நன்றிங்க நாடோடி இலக்கியன்!!!

  3. புதுகைத் தென்றல் Says:

    நல்லா இருக்கு.

    பாட்டும் சுகம். உங்க வரிகளும் சுகம்.

  4. cheena (சீனா) Says:

    காதல் கவிதை அருமை. திரைப் படங்களுக்கு எழுதுங்களேன். தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. வாழ்த்துகள்

  5. அருட்பெருங்கோ Says:

    / நல்லா இருக்கு.

    பாட்டும் சுகம். உங்க வரிகளும் சுகம்./

    நன்றிங்க புதுகைத் தென்றல்!!!

  6. அருட்பெருங்கோ Says:

    /காதல் கவிதை அருமை. திரைப் படங்களுக்கு எழுதுங்களேன். தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. வாழ்த்துகள்/

    நன்றிங்க சீனா. முதல்ல இங்க எழுதி திறமைய வளர்த்துக்குவோம் 

  7. பேரரசன் Says:

    வாழ்த்துக்கள்…..

    நிறமாக நானும் நிறை வாசம் நீயும்
    பூவிலே ஒருவராய்… மலர லாமா?
    இரவாக நானும் சிறு மீன்கள் நீயும்
    வானிலோ வெண்ணிலா… நுகர லாமா?
    கண்ணடியில் கனவாக வருகின்ற வேளை
    இமைகொண்டு இரவோடு சிறை செய்யவா?
    கைதாக கண்தேடி நானாக வந்தேன்
    என்சிறையும் நீயல்லவா?

    அருமை…

  8. கோகிலவாணி கார்த்திகேயன் Says:

    நிறமாக நானும் நிறை வாசம் நீயும்
    பூவிலே ஒருவராய்… மலர லாமா?

    “Poovaaga naamume” What about My opinion?

    Karuthu mattume Solluvom. hi hi hi!

    சுமையின்றி சுகமாக நீயென்னை சுமக்க
    சிறகிலொரு இறகாகவா?

    Really These lines are something great.

    [Sorry for English Font (my e- Kalappai has gone)].

  9. அருட்பெருங்கோ Says:

    @பேரரசன்

    வாழ்த்துக்கும், பாராட்டுக்கும் நன்றி நண்பரே…

  10. வந்தியத்தேவன் Says:

    // உன் கண்ணில்பாதி என் கண்ணில்பாதி கண்டோமே ஓரோவியம்
    உன் சொல்லில்பாதி என்சொல்லில் பாதி செய்தோமே சிறுகாவியம் //

    ஆரம்பமே அசத்தல்! பாடல் முழுதும் அருமையான வரிகள்!! வாழ்த்துக்கள்!

  11. அருட்பெருங்கோ Says:

    / ஆரம்பமே அசத்தல்! பாடல் முழுதும் அருமையான வரிகள்!! வாழ்த்துக்கள்!/

    வாழ்த்துகளுக்கு நன்றிங்க வந்தியத்தேவன்!!!

Leave a Reply