நானே பேசிக்கொண்டு.. தமிழ்த்தாய் வாழ்த்து - பொருள் + இசையுடன்
Feb 20

பாடல் : இஷ்டம் இஷ்டம்
படம் : அம்ருதம் (மலையாளம்)
இசை : ஜெயச்சந்திரன்
குரல் : சித்ரா
வரிகள் : கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி

மெட்டுக்கேற்ற தமிழ் வரிகள் இங்கு

முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
பனிப் பெய்யும் காலையில் முதல்முத்தம்
முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
மாலை இல்லம் வரும்நேரம் ஒருமுத்தம்
முத்தமாநிலம் நானே நீமுத்தமாமழை தூவு

நெருங்கிவரும் பொழுதினில் விரல்பேசவும்
தூரம்போகும் வேளையில் தொலைபேசவும்
பகலொன்றில் நீசிந்தும் பனிமுத்தமும்
தீராத இரவிலுன் தோள்சாயவும்
கனவுகளாய் என் கண்களினில்
உள்ளே முழுதும் நீதான்

முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
பனிப் பெய்யும் காலையில் முதல்முத்தம்

கண்ணோர கனவிலும் கதைபேசவும்
கொண்டாடும் விழியினில் குடியேறவும்
கடற்கரை நடையினில் விரல்பின்னவும்
காதோடு இழைகின்ற இசையாகவும்
எந்நேரமும் உன்னோடுதான்
உயிராக சேர்கிறேன் நான்

முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
பனிப் பெய்யும் காலையில் முதல்முத்தம்
முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
மாலை இல்லம் வரும்நேரம் ஒருமுத்தம்
முத்தமாநிலம் நானே நீமுத்தமாமழை தூவு

பாடலைக் கேட்க :

Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

No Related Posts but...

written by அருட்பெருங்கோ

One Response to “முத்தம் முத்தம்”

  1. G.Ragavan Says:

    இசை ஜெயச்சந்திரன்னு போட்டிருக்கீங்க. இவரு பாடகர் ஜெயச்சந்திரனா? அவர் எனக்கு ரொம்பப் பிடிச்ச பாடகர்.

    இருங்க…நான் என்னுடைய தமிழ்ப்படுத்துதலைச் செய்றேன். :)

Leave a Reply

Press F12 to toggle between English and Tamil

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout