ஆடவாரி மாட்டலுக்கு அர்த்தாலே வேருலே தென்றல்.காம் பாட்காஸ்டிங் செய்தியோடைகள்
Feb 28

பாடல் : ஏமாய்ந்தி ஈ வேளா
படம் : ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலே வேருலே
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல் : உதித் நாராயண்
வரிகள் : குலசேகர்

மெட்டுக்கேற்ற எனது தமிழ் வரிகள் கீழே.
நா.முத்துக்குமாரின் வரிகள் யாரடி நீ மோகினி படத்தில் உள்ள ‘எங்கேயே பார்த்த நெருக்கம்’ பாடலாக…

Can you feel her?
Is your heart speaking to her?
Can you feel the love?
Yes

ஏதேதோ பேசும் என்னை
எதிரே அவள் வந்தவேளை
நிலா நிலா நிலா போலதானே
தூண்டில் ஆக ஒளிவீசும்பேதை
சிறுகுளுகுளு கண்களாலே மௌனமாக்கிப் போகிறாளே

கவிதை வடிவிலொரு சிற்பம்
கொஞ்சம்கெஞ்சவைக்குமவள் கோபம்
இரும்பு இதயம் இழுக்கும் காந்தம்
உயிரைவந்து உலுக்கும் உருவம்
மறுபடியும் எனது ஜனனம்
மனதிலெங்கும் காதல் மலரும்

சிறுபிள்ளை இழுத்துப்போகும் நூல்வண்டி போலானேன்
இவளுக்கொரு அடிமைபோல கூட கூட கூட போகிறேன்
அசையுமழகு விரல்களாலே ஆவியெடுத்துப் போகிறாள்
இதயம்திறந்து பார்த்துவிட்டு என்னவிலையென்று கேட்கிறாள்
இதோஇதோ இப்பொழுதே இனாமாக இதயம் தந்தேன்

அவளின் கண்கள் தாளம்போட
அலையும் கூந்தல் கவிதைபாட
எனது இதயம் நடனம் ஆட
உதடு ஏதோ உளறல்தேட

ஏதேதோ பேசும் என்னை
எதிரே அவள் வந்தவேளை
நிலா நிலா நிலா போலதானே
தூண்டில் ஆக ஒளிவீசும்பேதை
சிறுகுளுகுளு கண்களாலே மௌனமாக்கிப் போகிறாளே

நாளும் நட்சத்திரம் பார்த்து
பெண் தேடிப்போகும் வலி இல்லை.
தேவ தேவதை போன்ற
ஒரு பெண்ணை இழக்கும் வழியேதுமில்லை.
கிலுகிலுப்பை ஆட்டும்போது அழ மறந்த குழந்தைபோல
அவள்முகத்தை பார்க்கும்போது எனைமறந்துபோகின்றேன்

களவு செய்தே கைதும் செய்தாள்
நின்று கொண்டே நடக்க வைத்தாள்
கண்கள் இரண்டும் சிரிக்க வைத்தாள்
மௌனமாக பேசவைத்தாள்

தெலுங்கு பாடலைக் கேட்க :

Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

No Related Posts but...

written by அருட்பெருங்கோ

Leave a Reply

Press F12 to toggle between English and Tamil

Keyboard Layout Phonetic (Taminglish) Tamil99 Layout