Mar 05

பாடல் : நானாக நானில்லை தாயே
படம் : தூங்காதே தம்பி தூங்காதே
இசை : இளையராஜா
குரல் : எஸ்.பி.பி

நானாக நானில்லை தாயே
நல்வாழ்வு தந்தாயே நீயே
பாசம் ஒரு நேசம்
கண்ணாரக் கண்டான் உன்சேயே

(நானாக)

கீழ் வானிலே ஒளி வந்தது
கூட்டை விட்டு கிளி வந்தது
நான் பார்க்கும் ஆகாயம்
எங்கும் நீ பாடும் பூபாளம்
வாடும் பயிர்வாழ
நீ தானே நீர் வார்த்த கார்மேகம்

(நானாக)

மணி மாளிகை மாடங்களும்
மலர் தூவிய மஞ்சங்களும்
தாய் வீடு போலில்லை
அங்கு தாலாட்ட ஆளில்லை
கோயில் தொழும் தெய்வம்
நீயின்றி நான் காண வேறில்லை

(நானாக)

பாடலைக் கேட்க :

Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

written by அருட்பெருங்கோ