பிரிவொன்றைச் சந்தித்தேன்
Jun 26

வழக்கம்போல இன்னொரு தெலுங்கு மெட்டுக்கான எனது தமிழ் வரிகள்!

படம் : வான
இசை : கமலாக்கர்
குரல் : ரஞ்சித், சித்ரா
தெலுங்கு வரிகள் : சீத்தாராம சாஸ்திரி

தமிழில் :

ஒருகண்ணில் பூக்கும் மறுகண்ணில் தாக்கும் சிறுபார்வை யார் தந்தது
கைவளையல் குலுங்க கால்கொலுசு சிணுங்க இதழ்கவிதை யார் சொன்னது
கவிதை தருவாயா… இதழ்கள் தருவேனே… - ஒரு கண்ணில்

பனித்துளிப் பூக்கள் மெய்யோடுசாயும் மெல்லினம் உன் ஸ்பரிசம்
பலகோடி மின்னல் உயிர்வரைபாயும் வல்லினம் உன் ஸ்பரிசம்
இனங்கள் கலக்கட்டும்… காதல் களைகட்டும்… - ஒரு கண்ணில்

இதயத்தின் ஆழம் நினைவுகள் ஓரம் வரைந்தேன் உனதுருவம்
இரவினில் நீளும் கனவுகள் யாவும் கரைந்தேன் தினந்தோறும்
மனசே புவியாக… காதல் நிலவாக… - ஒரு கண்ணில்

No Related Posts but...

written by அருட்பெருங்கோ \\ tags:

5 Responses to “ஒருகண்ணில் பூக்கும் மறுகண்ணில் தாக்கும்”

  1. Kavitha Says:

    Varigal nandraaga prunthi ullathu…. Payanam thodara vazhthukkal…. :)…

  2. அருட்பெருங்கோ Says:

    நன்றிங்க கவிதா! யாருமே பாட்ட கேட்கல போலன்னு நெனச்சேன். நீங்க ஒருத்தராவது கேட்டிருக்கீங்க :)

  3. Sophia Says:

    Hi Siva,

    How r u?
    Lines ellame superb….
    Nalla iruku…..
    yarum kekalanu ninacheingala athan kavithakuda nanum sernthuten… ;)

  4. அருட்பெருங்கோ Says:

    நல்லாருக்கேங்க.

    ம்ம்ம் நன்றி சோஃபியா :)

  5. புனிதா Says:

    நல்லா இருக்குங்க…நான் பாடிக் கூட பார்த்தேன்!

Leave a Reply