Jul 27

பாடல் : இளநெஞ்சே வா
படம் : வண்ன வண்ணப் பூக்கள்
இசை : இளையராஜா
குரல் : கே ஜே ஜேசுதாஸ்
வரிகள் : வாலி

இளநெஞ்சே வா தென்றல் தேரினில் எங்கும் போய் வரலாம்
அட அங்கே பார் மஞ்சள் வான் முகில் கையால் நாம் தொடலாம்
கண்ணோடு ஒரு சந்தோசம்..என்னோடு ஒரு சங்கீதம்…இந்நேரம்…

(இள நெஞ்சே வா)

பச்சைப் புல் மெத்தை விரித்து அங்கே இளம் தத்தைகள் தத்திக் குதிக்கும்
பட்டுப் பூ மொட்டு வெடிக்கும் செந்தேன் பெற பொன்வண்டு வட்டம் அடிக்கும்
சுற்றிலும் மூங்கில் காடுகள் தென்றலும் தூங்கும் வீடுகள்
உச்சியின் மேலே பார்க்கிறேன் பட்சிகள் வாழும் கூடுகள்
மண்ணின் ஆடை போலே வெள்ளம் ஓடுதே
அங்கே நாரை கூட்டம் செம்மீன் தேடுதே…இந்நேரம்…

(இள நெஞ்சே வா)

அற்புதம் என்ன உரைப்பேன்.. இங்கே வர என்னை மறப்பேன்
கற்பனை கொட்டிக் குவித்தேன் இங்கே அந்த கம்பனை வம்புக்கிழுத்தேன்
வர்ணித்துப் பாடும் கவிஞன் நான், வண்ணங்கள் தீட்டும் கலைஞன் நான்
சிந்தனை தேரில் ஏறியே சுற்றிட ஏங்கும் இளைஞன் நான்
கண்ணில் காணும் யாவும் என்னைத் தூண்டுதே
எந்தன் கைகள் நீண்டு விண்ணைத் தீண்டுதே… இந்நேரம்…

(இள நெஞ்சே வா)

பாடலைக் கேட்க:


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

written by அருட்பெருங்கோ

Jul 27

பாடல் : பூவே செம்பூவே
படம் : சொல்லத் துடிக்குது மனசு (1988)
இசை : இளையராஜா
குரல் : கே. ஜே. ஜேசுதாஸ்
வரிகள் : ???

பூவே செம்பூவே உன் வாசம் வரும்
வாசல் என் வாசல் உன் பூங்காவனம்
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

நிழல் போல நானும் நடை போட நீயும்
தொடர்கின்ற சொந்தம் நெடுங்கால பந்தம்
கடல் வானம் கூட நிறம் மாறக் கூடும்
மனம் கொண்ட பாசம் தடம் மாறிடாது
நான் வாழும் வாழ்வே உனக்காகத்தானே
நாள் தோறும் நெஞ்சில் நான் ஏந்தும் தேனே
என்னாளும் சங்கீதம் சந்தோஷமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

உனைப்போல நானும் ஒரு பிள்ளை தானே
பலர் வந்து கொஞ்சும் கிளிப் பிள்ளை நானே
உனைப்போல நாளும் மலர் சூடும் பெண்மை
விதி என்னும் நூலில் விளையாடும் பொம்மை
நான் செய்த பாவம் என்னோடு போகும்
நீ வாழ்ந்து நாந்தான் பார்த்தாலே போதும்
இன்னாளும் என்னாளும் உல்லாசமே
வாய் பேசிடும் புல்லாங்குழல்
நீதானொரு பூவின் மடல்

(பூவே செம்பூவே)

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

written by அருட்பெருங்கோ

Jul 27

பாடல் : நலம் வாழ என்னாளும்
படம் : மறுபடியும்
இசை : இளையராஜா
குரல் : எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள் : வாலி

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்

(நலம் வாழ)

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம்் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே

(நலம் வாழ)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்…

(நலம் வாழ)

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

written by அருட்பெருங்கோ