Feb 20
பாடல் : இஷ்டம் இஷ்டம்
படம் : அம்ருதம் (மலையாளம்)
இசை : ஜெயச்சந்திரன்
குரல் : சித்ரா
வரிகள் : கைதப்ரம் தாமோதரன் நம்பூதிரி
மெட்டுக்கேற்ற தமிழ் வரிகள் இங்கு
முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
பனிப் பெய்யும் காலையில் முதல்முத்தம்
முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
மாலை இல்லம் வரும்நேரம் ஒருமுத்தம்
முத்தமாநிலம் நானே நீமுத்தமாமழை தூவு
நெருங்கிவரும் பொழுதினில் விரல்பேசவும்
தூரம்போகும் வேளையில் தொலைபேசவும்
பகலொன்றில் நீசிந்தும் பனிமுத்தமும்
தீராத இரவிலுன் தோள்சாயவும்
கனவுகளாய் என் கண்களினில்
உள்ளே முழுதும் நீதான்
முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
பனிப் பெய்யும் காலையில் முதல்முத்தம்
கண்ணோர கனவிலும் கதைபேசவும்
கொண்டாடும் விழியினில் குடியேறவும்
கடற்கரை நடையினில் விரல்பின்னவும்
காதோடு இழைகின்ற இசையாகவும்
எந்நேரமும் உன்னோடுதான்
உயிராக சேர்கிறேன் நான்
முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
பனிப் பெய்யும் காலையில் முதல்முத்தம்
முத்தம் முத்தம் ஒருமுத்தம் முத்தம்
மாலை இல்லம் வரும்நேரம் ஒருமுத்தம்
முத்தமாநிலம் நானே நீமுத்தமாமழை தூவு
பாடலைக் கேட்க :
Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
written by அருட்பெருங்கோ
Oct 29
“ஒரு சிரி கண்டால்” எனும் மலையாளப் பாட்டின் மெட்டுக்கு நான் எழுதிய தமிழ் வரிகள் :
ஆண் :
குறுநகை கண்டால் முகம் கண்டால் நிலவொளி
சிறுவிழி பார்த்தால் துளி பார்த்தால் கதிரொளி
பயமானக் கண்களினுள்ளே பலமானப் பார்வைகளா
திறவாத இதழ்களினுள்ளே திமிரானப் புன்னகையா
ஏ பெண்ணே வலி போதுமினி மனதுமலருமா…
கார்கால மேகம்… கருஞ் சாந்தள்ளிப் போகும்
தலையாட்டி நீள்கூந்தல் உலரும் நேரம்… ஹோய்…
வெயில் காயும்நேரம் சுட்டெரிக்கும் தீச்சூர்யன்
சிறுவிழிச் சூட்டினில் உருகுவதேன் கண்ணே
நதியினில் மீனென அலைகிற பெண்ணுடன் சேர்ந்தாடும் நீரும்
பொழிகிற மழையினில் நனைகிற உன்னுடன் கூத்தாடும் வானும்
உலகே வந்து கொஞ்சுமோ… உயிரில் வந்த ஓவியம்
பெண்:
கண்ணுள்ளே கனவாய் நுழைந்தது நீதானே
சிறைகண்ட மனதோரம் காதல் வந்து கொல்லும்
அளவில்லா அன்பை மனம் சொல்ல துடிக்கிறதே
புயல்வெளி காற்றைப் போல் நாணம் தடுக்கிறதே
அந்தியில் பூத்ததும் காற்றுடன் கலக்கிற பூமணம் போலே
இரவினில் தனியென நிலவுடன் மொழிகிற ஆகாயம் போலே
கனவில் வந்து சொல்லுவேன்… நனவில் கொண்ட காதலை
மலையாளப் பாடலைக் கேட்க :
Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க
பதிவர்களில் பாடகர்கள் யாரேனும் இருந்தால் சொல்லுங்கள் பாடலின் karoake அனுப்புகிறேன். முடிந்தால் பாடித் தாருங்கள்
அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ
written by அருட்பெருங்கோ
Recent Comments