பாடல் : அய்யய்யோ
படம் : பருத்தி வீரன்
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல்கள் : கிருஷ்ணராஜ், மாணிக்கவிநாயகம், ஷ்ரேயாகோஷல், யுவன்சங்கர் ராஜா
வரிகள் : ???
ஏலே…ஏ..லே..லே…லே…
ஏலே…ஏ…லே..லே…லே…
ஒத்தப்பன மரத்துல செத்த நேரம் ஒம்மடியில்
தல வச்சி சாஞ்சிக்கிறேன் சங்கதியை சொல்லித் தரேன் வாடீ… நீ வாடீ…
பத்து கண்ணு பாலத்துல மேய்ச்சலுக்கு காத்திருப்பேன்
பாச்சலோட வாடி புள்ள கூச்சமிங்கு தேவையில்லை.. வாடீ.. நீ வாடீ..
ஏலே…ஏ..லே..லே…லே…
ஏலே…ஏ…லே..லே…லே…
செவ்வெளனி சின்ன கனி..ஒன்ன செறையெடுக்க போறேன் வா நீ..
அய்யய்யோ யேன் உசுருக்குள்ளே தீயை வச்சான் அய்யய்யோ..
யென் மனசுக்குள்ளே நோயத் தச்சான் அய்யய்யோ..
சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னா கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்த புள்ள
அய்யய்யோ .. யேன் வெக்கம் பத்தி வேகுறதே அய்யய்யோ
யென் சமஞ்ச தேகம் சாயுறதே அய்யய்யோ
அரளி வெத வாசக்காரி..ஆளக் கொல்லும் பாசக்காரி..
யேன் உடம்பு நெஞ்ச கீறி.. நீ உள்ள வந்த கெட்டிக்காரி..
அய்யய்யோ.. யென் இடுப்பு வேட்டி எறங்கி போச்சி அய்யய்யோ
என் மீச முறுக்கும் மடங்கிப் போச்சே அய்யய்யோ
கல்லுக்குள்ள தேர போல.. வளஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா
காலச் சுத்தும் நெழலப் போல..பொட்ட காட்டில் ஒங்கூடவே தங்கிடவா
அய்யனாரப் பாத்தாலே ஓன் நெனப்பு தாண்டா
அம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சே ஏண்டா
நான் வாடா மல்லி.. நீ போடா அள்ளி..
தொரட்டிக் கண்ணு கருவாச்சியே.. நீ தொட்டா அருவா கரும்பாகுதே
ஏ தொரட்டிக் கண்ணு கருவாச்சியே.. நீ தொட்டா அருவா கரும்பாகுதே
சண்டாளி ஓன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேம் புள்ள
நீ கொன்னாக் கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்த புள்ள
பாடலைக் கேட்க :
Recent Comments