Mar 23

பாடல் : ஜல்சா பண்ணுங்கடா
படம் : சென்னை 600028
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல் : ரஞ்சித், திப்பு, ஹரிசரண், கார்த்திக்
வரிகள் : ???

வாழ்க்கைய யோசிங்க டா, தலையெழுத்த நல்லா வாசிங்க டா
யோசிச்சுப் பாருங்க டா எல்லோரும் ஒன்னா சேருங்க டா
இருக்கிற வரைக்கும் அனுபவிக்க இளமை இருக்குதடா
வருகிற வரைக்கும் லாபமடா வசதிய தேடுங்கடா

இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா

ஞாபகம் வந்ததடா, அந்த நாள் ஞாபகம் வந்ததடா
நண்பன விட ஒருத்தன் , லைஃப்க்கு தேவை இல்லையடா
நட்புக்கு கூட கற்புகள் உண்டு நல்லா தெரிஞ்சுக்கடா
அற்புதமான நண்பர்கள் சேர்ந்தா வெற்றிகள் குவியுமடா
நம் வெற்றிகள் குவியுமடா

இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா

உழைக்கும் கைய நம்பி நாளை உலகமே இருக்குதடா
உண்மைக்கு போராடி குரல் கொடுத்தா ஊரே வணங்குமடா
நான் உங்க தோழன் நீ எந்தன் நண்பன் பிரிவே இல்லையடா
நாளைய உலகம் இளைஞர்கள் கையில் நம்பிக்க வையுங்கடா
என் மேல நம்பிக்க வையுங்கடா
ஓ.. இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா

காதல் வந்துச்சுனா முகத்துல கலர் பல தெரியுமடா
கண்ணாடி முன்னாடி நீ நின்னா கவர்ச்சிகள் தோன்றுமடா
காதல் இருந்தா கவலைகள் தீரும் காதல் பண்ணுங்கடா
அந்த கல்யாணம் மட்டும் லேட்டா யோசி நல்லா இருக்குமடா
வாழ்க்க நல்லா இருக்குமடா

இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா

டாவுல விழுந்தாக்கா மனசு நோவுல அழுகுமடா
தீவுல இருப்பதுபோல் திசையே தெரியாம போகுமடா
இன்னைக்கு சிரிப்பா நாளைக்கு முறைப்பா இன்னமும் இருக்குதடா
அந்த ரோதனைகள் நமக்கு இப்போ எதுக்கு உசாரா இருந்துக்கடா
ஃபிகர நம்பாம பொழச்சுக்கடா

இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா
இனி ஜல்சா பண்ணுங்க டா குஜாலா ஜில்பா காட்டுங்கடா

written by அருட்பெருங்கோ

Feb 28

பாடல் : ஏமாய்ந்தி ஈ வேளா
படம் : ஆடவாரி மாட்டலக்கு அர்த்தாலே வேருலே
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல் : உதித் நாராயண்
வரிகள் : குலசேகர்

மெட்டுக்கேற்ற எனது தமிழ் வரிகள் கீழே.
நா.முத்துக்குமாரின் வரிகள் யாரடி நீ மோகினி படத்தில் உள்ள ‘எங்கேயே பார்த்த நெருக்கம்’ பாடலாக…

Can you feel her?
Is your heart speaking to her?
Can you feel the love?
Yes

ஏதேதோ பேசும் என்னை
எதிரே அவள் வந்தவேளை
நிலா நிலா நிலா போலதானே
தூண்டில் ஆக ஒளிவீசும்பேதை
சிறுகுளுகுளு கண்களாலே மௌனமாக்கிப் போகிறாளே

கவிதை வடிவிலொரு சிற்பம்
கொஞ்சம்கெஞ்சவைக்குமவள் கோபம்
இரும்பு இதயம் இழுக்கும் காந்தம்
உயிரைவந்து உலுக்கும் உருவம்
மறுபடியும் எனது ஜனனம்
மனதிலெங்கும் காதல் மலரும்

சிறுபிள்ளை இழுத்துப்போகும் நூல்வண்டி போலானேன்
இவளுக்கொரு அடிமைபோல கூட கூட கூட போகிறேன்
அசையுமழகு விரல்களாலே ஆவியெடுத்துப் போகிறாள்
இதயம்திறந்து பார்த்துவிட்டு என்னவிலையென்று கேட்கிறாள்
இதோஇதோ இப்பொழுதே இனாமாக இதயம் தந்தேன்

அவளின் கண்கள் தாளம்போட
அலையும் கூந்தல் கவிதைபாட
எனது இதயம் நடனம் ஆட
உதடு ஏதோ உளறல்தேட

ஏதேதோ பேசும் என்னை
எதிரே அவள் வந்தவேளை
நிலா நிலா நிலா போலதானே
தூண்டில் ஆக ஒளிவீசும்பேதை
சிறுகுளுகுளு கண்களாலே மௌனமாக்கிப் போகிறாளே

நாளும் நட்சத்திரம் பார்த்து
பெண் தேடிப்போகும் வலி இல்லை.
தேவ தேவதை போன்ற
ஒரு பெண்ணை இழக்கும் வழியேதுமில்லை.
கிலுகிலுப்பை ஆட்டும்போது அழ மறந்த குழந்தைபோல
அவள்முகத்தை பார்க்கும்போது எனைமறந்துபோகின்றேன்

களவு செய்தே கைதும் செய்தாள்
நின்று கொண்டே நடக்க வைத்தாள்
கண்கள் இரண்டும் சிரிக்க வைத்தாள்
மௌனமாக பேசவைத்தாள்

தெலுங்கு பாடலைக் கேட்க :

Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

written by அருட்பெருங்கோ

Feb 26

பாடல் : அய்யய்யோ
படம் : பருத்தி வீரன்
இசை : யுவன் சங்கர் ராஜா
குரல்கள் : கிருஷ்ணராஜ், மாணிக்கவிநாயகம், ஷ்ரேயாகோஷல், யுவன்சங்கர் ராஜா
வரிகள் : ???

ஏலே…ஏ..லே..லே…லே…
ஏலே…ஏ…லே..லே…லே…
ஒத்தப்பன மரத்துல செத்த நேரம் ஒம்மடியில்
தல வச்சி சாஞ்சிக்கிறேன் சங்கதியை சொல்லித் தரேன் வாடீ… நீ வாடீ…
பத்து கண்ணு பாலத்துல மேய்ச்சலுக்கு காத்திருப்பேன்
பாச்சலோட வாடி புள்ள கூச்சமிங்கு தேவையில்லை.. வாடீ.. நீ வாடீ..
ஏலே…ஏ..லே..லே…லே…
ஏலே…ஏ…லே..லே…லே…
செவ்வெளனி சின்ன கனி..ஒன்ன செறையெடுக்க போறேன் வா நீ..

அய்யய்யோ யேன் உசுருக்குள்ளே தீயை வச்சான் அய்யய்யோ..
யென் மனசுக்குள்ளே நோயத் தச்சான் அய்யய்யோ..

சண்டாளி உன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேன் புள்ள
நீ கொன்னா கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்த புள்ள
அய்யய்யோ .. யேன் வெக்கம் பத்தி வேகுறதே அய்யய்யோ
யென் சமஞ்ச தேகம் சாயுறதே அய்யய்யோ

அரளி வெத வாசக்காரி..ஆளக் கொல்லும் பாசக்காரி..
யேன் உடம்பு நெஞ்ச கீறி.. நீ உள்ள வந்த கெட்டிக்காரி..
அய்யய்யோ.. யென் இடுப்பு வேட்டி எறங்கி போச்சி அய்யய்யோ
என் மீச முறுக்கும் மடங்கிப் போச்சே அய்யய்யோ

கல்லுக்குள்ள தேர போல.. வளஞ்சிருக்கும் தாடிக்குள்ள ஒளிஞ்சிக்கவா
காலச் சுத்தும் நெழலப் போல..பொட்ட காட்டில் ஒங்கூடவே தங்கிடவா
அய்யனாரப் பாத்தாலே ஓன் நெனப்பு தாண்டா
அம்மிக்கல்லும் பூப்போல மாறிப்போச்சே ஏண்டா
நான் வாடா மல்லி.. நீ போடா அள்ளி..

தொரட்டிக் கண்ணு கருவாச்சியே.. நீ தொட்டா அருவா கரும்பாகுதே
ஏ தொரட்டிக் கண்ணு கருவாச்சியே.. நீ தொட்டா அருவா கரும்பாகுதே
சண்டாளி ஓன் பாசத்தாலே
நானும் சுண்டெலியா ஆனேம் புள்ள
நீ கொன்னாக் கூட குத்தமில்ல
நீ சொன்னா சாகும் இந்த புள்ள

பாடலைக் கேட்க :


Get Your Own Hindi Songs Player at Music Plugin

written by அருட்பெருங்கோ

Feb 25

பாடல் : யாரோ யாருக்குள்
படம்: சென்னை 600 0028
இசை: யுவன் சங்கர் ராஜா
குரல் : எஸ்பிபி, சித்ரா
வரிகள் : வாலி

யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க் காதல் ஒரு வேள்வி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க்காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடைக் கண்கள் நீ வீச
கொக்கைப் போல நாள் தோறும்
ஒற்றைக் காலில் நின்றேன்.. கண்மணி…

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க் காதல் ஒரு வேள்வி

ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே

ஓஹோ…
நின்றாய் இங்கு மின்னல் கீற்றா
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றா
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்

காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
என்னால் வாழ ஆகாது
அன்பேவா…. ஏஹே

யாரோ..

ம் ஆஹா
யாருக்குள் இங்கு யாரோ

ஹ்ம்ம்ம்
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க் காதல் ஒரு வேள்வி

உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் கொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்

ஆஹா ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆய் விடும்

காதல் கொண்டு பேசும் போது
சென்னைத் தமிழும் செந்தேன்தான்

ஆசை வெள்ளம் பாயும் போது
வங்கக் கடலும் வாய்க்கால் தான்
அன்பே வாஆ… ஹா…

யாரோ..
ம்ம் ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹாஆஆ..
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர்க் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடைக் கண்கள் நீ வீச
கொக்கைப் போல நாள் தோறும்
ஒற்றைக் காலில் நின்றேன்.. கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க் காதல் ஒரு வேள்வி

பாடலைக் கேட்க :

Get this widget Track details eSnips Social DNA

written by அருட்பெருங்கோ

Dec 31

படம் – கற்றது தமிழ்
இசை – யுவன் சங்கர் ராஜா
குரல் – இளையராஜா
வரிகள் – நா. முத்துக்குமார்

என் வாழ்க்கைல வந்தது மூணே மூணு லெட்டர்
Still i rememnber my first letter

ப்ரபா,

நீ என்னை தேடியிருப்பேன்னு எனக்கு தெரியும்
நானும் அம்மாவும் இங்க மகாராஷ்ட்ராவில தூரத்து மாமா வீட்டுல இருக்கறோம்
நீ வர்றதுக்கோ லட்டர் எழுதறதுக்கோ ஏதும் சமயம் வர்றப்ப நான் சொல்றேன்
நேரத்துக்கு சாப்பிடு
வாரத்துக்கு மூணு நாளாவது குளி
அந்த சாக்ச தொவைச்சு போடு
நகம் கடிக்காத
கடவுள வேண்டிக்கோ…
-ஆனந்தி

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…

அடி என் பூமி தொடங்கும் இடம் எது? நீதானே
அடி என் பாதை இருக்கும் இடம் எது? நீதானே
பார்க்கும் திசைகள் எல்லாம் பாவை முகம் வருதே
மீன்கள் கானலின் நீரில் தெரிவதுண்டோ
கண்கள் பொய்கள் சொல்வதுண்டோ

நீ போட்ட கடிதத்தின் வரிகள் கடலாக
அதில் மிதந்தேனே பெண்ணே நானும் படகாக

பறவையே எங்கு இருக்கிறாய்
பறக்கவே என்னை அழைக்கிறாய்
தடயங்கள் தேடி வருகிறேன் அன்பே…

உன்னோடு நானும் போகின்ற பாதை
இது நீளாதோ தொடு வானம் போலவே
கதை பேசிக்கொண்டே வா காற்றோடு போவோம்
உரையாடல் தீர்ந்தாலும் உன் மௌனங்கள் போதும்

இந்த புல் பூண்டும் பறவை யாவும் போதாதா?
இனி பூலோகம் முழுதும் அழகாய்ப் போகாதா?

முதல் முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே… அன்பே…

ஏழை காதல் மலைகள்தனில் தோன்றுகின்ற ஒரு நதியாகும்
மண்ணில் விழுந்தும் ஒரு காயமின்றி உடையாமல்
உருண்டோடும் நதியாகிடுவோம்
இதோ இதோ இந்த பயணத்திலே
இதுபோதும் கண்மணி வேறென்ன நானும் கேட்பேன்
பிரிந்தாலும் மனதிலே இந்த நொடியில் என்றும் வாழ்வேன்

இந்த நிகழ்காலம் இப்படியேதான் தொடராதா?
என் தனியான பயணங்கள் இன்றுடன் முடியாதா?

முதல்முறை வாழப்பிடிக்குதே
முதல்முறை வெளிச்சம் பிறக்குதே
முதல்முறை முறிந்த கிளை ஒன்று பூக்குதே
முதல்முறை கதவு திறக்குதே
முதல்முறை காற்று வருகுதே
முதல்முறை கனவு பலிக்குதே… அன்பே…

written by அருட்பெருங்கோ \\ tags: , ,