Feb 25

பாடல் : யாரோ யாருக்குள்
படம்: சென்னை 600 0028
இசை: யுவன் சங்கர் ராஜா
குரல் : எஸ்பிபி, சித்ரா
வரிகள் : வாலி

யாரோ.. யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க் காதல் ஒரு வேள்வி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க்காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடைக் கண்கள் நீ வீச
கொக்கைப் போல நாள் தோறும்
ஒற்றைக் காலில் நின்றேன்.. கண்மணி…

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க் காதல் ஒரு வேள்வி

ஊரை வெல்லும் தோகை நானே
உன்னால் இன்று தோற்றுப்போனேன்
கண்ணால் யுத்தமே நீ
செய்தாய் நித்தமே

ஓஹோ…
நின்றாய் இங்கு மின்னல் கீற்றா
நித்தம் வாங்கும் மூச்சுக்காற்றா
உன்னை சூழ்கிறேன் நான்
உன்னை சூழ்கிறேன்

காற்றில் வைத்த சூடம் போலே
காதல் தீர்ந்து போகாது
உன்னை நீங்கி உஷ்ணம் தாங்கி
என்னால் வாழ ஆகாது
அன்பேவா…. ஏஹே

யாரோ..

ம் ஆஹா
யாருக்குள் இங்கு யாரோ

ஹ்ம்ம்ம்
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ

விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க் காதல் ஒரு வேள்வி

உந்தன் ஆடை காயப் போடும்
உங்கள் வீட்டு கம்பிக் கொடியாய்
என்னை எண்ணினேன் நான்
தவம் பண்ணினேன்

ஆஹா ஹா ஹா
கெட்ட கெட்ட வார்த்தை சொல்லி
கிட்ட கிட்ட வந்தாய் துள்ளி
எட்டி போய் விடு இல்லை
ஏதோ ஆய் விடும்

காதல் கொண்டு பேசும் போது
சென்னைத் தமிழும் செந்தேன்தான்

ஆசை வெள்ளம் பாயும் போது
வங்கக் கடலும் வாய்க்கால் தான்
அன்பே வாஆ… ஹா…

யாரோ..
ம்ம் ம்ம்
யாருக்குள் இங்கு யாரோ
ம்ஹாஆஆ..
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி
உயிர்க் காதல் ஒரு வேள்வி

காதல் வரம் நான் வாங்க
கடைக் கண்கள் நீ வீச
கொக்கைப் போல நாள் தோறும்
ஒற்றைக் காலில் நின்றேன்.. கண்மணி

யாரோ யாருக்குள் இங்கு யாரோ
யார் நெஞ்சில் இங்கு யார் தந்தாரோ
விடை இல்லா ஒரு கேள்வி

உயிர்க் காதல் ஒரு வேள்வி

பாடலைக் கேட்க :

Get this widget Track details eSnips Social DNA

written by அருட்பெருங்கோ

Jul 27

பாடல் : நலம் வாழ என்னாளும்
படம் : மறுபடியும்
இசை : இளையராஜா
குரல் : எஸ் பி பாலசுப்ரமணியம்
வரிகள் : வாலி

நலம் வாழ என்னாளும் என் வாழ்த்துக்கள்
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும்
இளந்தென்றல் உன் மீது பண்பாடும்

(நலம் வாழ)

மனிதர்கள் சிலநேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம்் மாறலாம்
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு
இதில் என்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே

(நலம் வாழ)

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடலினில் உருவாகும் அலையானது
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது
நிலவினை நம்பி இரவுகள் இல்லை
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறு வாசல் வைப்பான் இறைவன்…

(நலம் வாழ)

பாடலைக் கேட்க :


Music Plugin தளத்தில் பாடலைக் கேட்க

அழியாத அன்புடன்,
அருட்பெருங்கோ

written by அருட்பெருங்கோ